புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

25 October 2016

தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் சந்திப்பு

TNHSPGTA DHARMAPURI

முதன்மைக்கல்வி அலுவலர்
அவர்களுடன் சந்திப்பு
  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில்,
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில்
தருமபுரி  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை (17.10.2016)  திங்கட்கிழமை மாலை  சந்தித்தனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் திரு.கா.காவேரி,
மாவட்ட பொருளாளர் திரு.சுப்பிரமணியன்,
மாவட்ட துணைத் தலைவர் திரு.நாகேந்திரன்
ஆகியோர்  முதன்மைக்கல்வி அலுவலர்  திருமதி.மகேஸ்வரி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

மாநில செய்தி தொடர்பாளர் திரு. ரா.செல்வம், மாநில துணைத்தலைவர் திரு.சேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
✅தற்போது முதுகலை ஆசிரியர்களில் பலர்,  பகுதி நேரத்தில்  எம்ஃபில் (M.Phil) உயர்க்கல்வி  படிக்க விரும்புகின்றனர். 
உயர்க்கல்வி  பயில  அனுமதி, 
பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் மற்றும் தேர்வுநிலை உள்ளிட்ட ஆணைகளை சிறப்பு முகாம்  நடத்தி வழங்க முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஜி.ஆரோக்கியம்,
மாவட்டசெய்தி தொடர்பாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA),
தருமபுரி மாவட்டம்

11 October 2016

06.10.2016.தருமபுரி மாவட்ட (TNHSPGTA) செயற்க்குழுக்கூட்டம். மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

06.10.2016.
--------------------------------------------
தருமபுரி மாவட்ட (TNHSPGTA)
---------------------------------------------- செயற்க்குழுக்கூட்டம்.
--------------------------------------
     TNHSPGTA ன்  மாவட்ட செயற்க்குழுக்கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாலை ( 06.10.2016)   7.00 மணி அளவில் சிறப்பாக  நடைபெற்றது.
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புதிய மாவட்ட பொறுப்பாளர்
-------------------------------------------------
  தேர்வு
--------------
1. அதிமான்கோட்டை (ஆ) பள்ளி தமிழ் முதுகலை ஆசிரியரும், மாவட்ட துணைத்தலைவருமான திரு.காவேரி அவர்கள் புதிய மாவட்ட செயலாளராகவும்,
2. பி.அக்ரஹாரம், வணிகவியல் முதுகலை ஆசிரியர்,  திரு.சுப்பிரமணியன்  அவர்கள்  மாவட்ட பொருளாளராகவும்,
3. நத்தமேடு, விலங்கியல்  முதுகலை ஆசிரியரும்,  பாப்பிரெட்டிபட்டி வட்டார இணைச்செயலாளருமான திரு.நாகேந்திரன் அவர்கள் மாவட்ட துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அவர்களின் பணி சிறக்க கூட்டத்தில் வாழ்த்து  தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து 
பதவி உயர்வில் தலைமையாசிரியராக சென்றுள்ள திரு.அப்துல் அஜீஸ் அவர்களுக்கும்,
மாவட்ட பொருளாளராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.வையாபுரி அவர்களுக்கும்,
மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.சம்பத்குமார் அவர்களுக்கும்,  அவர்களின் சங்க பணிக்காக பாராட்டப்பட்டார்கள்.
அதுசமயம் மேலும்    மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றி!   நன்றி!!  நன்றி!!
ஜி.ஆரோக்கியம்
மாவட்ட. செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
தருமபுரி மாவட்டம்.