புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label Educational News. Show all posts
Showing posts with label Educational News. Show all posts

6 March 2015

வாசித்தால் யுகம் எல்லாம் சுகமே...! புத்தகங்கள் நம் இரண்டாவது இதயங்கள்.

நம் ஆன்மாவை ஆனந்த மயமாக்கும் காகித ஆலயங்கள். பரந்தவானில் பறந்த பறவை ஓய்வெடுக்கக் கூடு திரும்புமே அதைப்போன்று, நாம் என்ன வேலைசெய்தாலும் நம் மனம் நிம்மதியடைவது புத்தகங்களை வாசிக்கும்போது மட்டும்தான். சூடுதான் சூரியனின் அடையாளம்; புத்தக வாசிப்புதான் உயிர்வாழ்தலின் அடையாளம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகில் கட்டப்பட்ட கட்டடங்கள் சிதிலமடைந்திருக்கலாம். ஆனால் அன்று எழுதப்பட்ட புத்தகங்கள் சுவடிகள் தாண்டி,அச்சு இயந்திரம் தாண்டி இதோ நம்தொடுதிரை அலைபேசிகளிலும் இணையப் பக்கங்களிலும் இன்னும் இளமையோடு நம் மனதோடு மவுனமாய் பேசிக்கொண்டிருக்கிறதே. காலத்தைக் காலமாக்கிய இந்தச் செப்படி வித்தை எப்படி நடந்தது? மனிதவாழ்க்கை புத்தாக்கம் பெற்றதே புத்தகங்களால்தானே! வாசிப்புதான் வசிப்பின் அடையாளம். வாசிக்காத நாள், இப்புவியில் நாம் வசிக்காதநாள்.

4 March 2015

"மாணவர்களை மனிதநேயமிக்கவர்களாக உருவாக்க வேண்டும்' : தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

மாணவர்களை மனித நேயம் மிக்கவர்களாக உருவாக்க சாரண ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி வலியுறுத்தினார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கத்தைத் தொடங்க அந்தப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சாரண அடிப்படைப் பயிற்சி முகாம் ஒகேனக்கல்லில் நடைபெற்று வருகிறது.
பாரத சாரண, சாரணியர் பயிற்சி மையம் சார்பில் நடைபெறும் இந்த முகாம் கடந்த பிப்.23-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி வரை நடைபெற்றது. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 209 ஆசிரியர்களுக்கு அடிப்படை சாரண ஆசிரியர் பயிற்சி, 21 ஆசிரியர்களுக்கு முன்னோடி சாரண ஆசிரியர் பயிற்சி என மொத்தம் 230 ஆசிரிய, ஆசிரியைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முகாமைப் பார்வையிட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பேசியது:
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் தான் அதிக நடுநிலைப் பள்ளிகளில் சாரண, சாரணிய இயக்கம் தொடங்க ஆசிரியர்களுக்கு சாரணப் பயிற்சி ஒரே கட்டமாக அளிக்கப்படுகிறது. 10 முதல் 14 வயது வரை நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சாரண பயிற்சியை அளிப்பதன் மூலம் அவர்களின் நாட்டுப் பற்று, தலைமைப் பண்பு, சேவை மனப்பான்மை ஆகிய நல்ல குணங்களை வளர்க்க முடியும்.

3 March 2015

அரசுப் பள்ளி மாணவர்களால் தமிழ் வளர்கிறது: சகாயம் ஐஏஎஸ் பெருமிதம்

உலகின் மூத்த மொழியாம் தமிழை, எழுத்தாளர்கள் கவிஞர், தமிழாசிரியர்கள் என்று யாரும் வளர்க்கவில்லை. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் தான் தமிழை வளர்க்கின்றனர் என்று உ.சகாயம் ஐஏஎஸ் பேசினார். நாமக்கல் லத்துவாடியில் நம்பிக்கை இல்ல அடிக்கல் நாட்டு விழா நடந்தது.ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் அறிவியல் நகரத் துணைத் தலைவருமான உ.சகாயம் தலைமை வகித்துப் பேசியதாவது: நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நான் பணியில் இருந்த கடந்த 2010-ம் ஆண்டு முசௌரி மலை நகருக்கு பயிற்சிக்கு சென்றேன். 58 நாள் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பயிற்சிக்கு சென்ற 8-வது நாளில் நான் பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.

30 January 2015

புதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை வழங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

               பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரும் வகையில், புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பல தரப்பினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கோரி உள்ளது. இதற்கான அறிவிப்பு, மத்திய அரசின் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில், 1992-இல் மாற்றங்கள் செய்யப்பட்டன. 

10 January 2015

மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தரம் பிரிக்கும் பள்ளிக்கல்வித் துறை: பெற்றோர், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு

              அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பள்ளி மாணவர்களை தரம் பிரித்து அணுகுமாறு, தலைமையாசிரியர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயாராக்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை, புதன்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தனது அனுபவங் களை அடிப்படையாகக் கொண்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதில் அரையாண்டு தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் முதல்நிலை மாணவர்கள், இடை நிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என 3 நிலைகளாக பிரிக்க அறிவுறுத்தியுள்ளார்.

படி... படி... என்பது படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்...

   படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்,” என, சந்திராயன் திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

9 January 2015

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்

அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

27 December 2014

MARCH 2015 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: 20 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள்

            இந்த ஆண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 20 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வில் 11 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வில் 9 லட்சம் பேரும் பங்கேற்க உள்ளனர். இதுகுறித்த முழுமையான விவரங்கள் சில நாள்களில் கிடைக்கும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.