புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

21 December 2016

இன்று ( 21.12.16) தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற மாவட்ட செயற்க்குழுக் கூட்டம்( TNHSPGTA)

(21.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி மாவட்டமான கும்பகோணம் நகர  மேல்நிலைப்பள்ளியில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக கும்பகோணம் கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20 December 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக தஞ்சை மாவட்ட  மாவட்ட செயற்க்குழுகூட்டம் இன்று (20.12.16) நடைபெற்றது.
இன்று(20.12.16) மாலை தஞ்சை மாவட்டத்தில் TNHSPGTA கழக உறுப்பினர்கள் கல்வி  மாவட்டமான பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தலைவர், செயலாளர், ஒருங்கிணைப்பாளர்,கல்வி மாவட்ட தலைவர், கல்வி மாவட்ட செயலர் மற்றும் கழக பொறுப்பாளர்கள் மற்றும் கழக உறுப்பினர் கள் கலந்து கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள மாநிலப்பொதுக்கூட்டம் மிக சிறப்பாக நடத்திக்கொடுப்பது என ஒருமனதாக பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட முதுகலையாசிரியர்கள் மற்றும் கழக உறுப்பினர்கள் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

27 November 2016

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன்.

                                       தஞ்சை மாவட்டத்தில்  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA)  அமைப்பு தோற்றுவிக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். மாநில தலைவர்  திரு.வே.மணிவாசகன்.                            ---------------------------                                                                                                           தஞ்சாவூர் மாவட்டதலைவர்,     
திரு.  M.குமார் 
மாவட்டசெயலர்,          திரு.வெ.கோபிசந்தர்
மாவட்ட பொருளாளர், திரு.S. கார்மேகம், தலைமையிடத்து செயலர்,  G.மாரிமுத்து & P.செல்வராஜ்
மாவட்ட ஆலோசகர்கள்,  வி.பன்னீர்செல்வம் & D.சேதுராமன்
மாவட்ட சட்ட செயலர், S. ராஜன்.
மாவட்ட செய்தி தொடர்பாளர்கள்:                  K.பிரதீப் 
R.ஜெகதீசன்
N.செந்தில் குமார் மற்றும் பலர் இன்றைய சிறப்புமிகு தஞ்சாவூர்  கூட்டத்தில் கலந்து கொண்டனர்
     
                   மாநில, மாவட்ட 
                    --------------------------
பொறுப்பாளர்களின் வாழ்த்து
---------------------------------------------------
புதிய தஞ்சை மாவட்டக்கழகம் உருவாகிட உந்து சக்தியாக இருந்திட்ட நம் மாநிலத்தலைவர் அவர்களுக்கும் ,
மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரா. பிரபாகரன். 
மாநிலப் பொ

----------------------------------------------------
தஞ்சை மாவட்ட அமைப்பிற்கு www.tnhspgtadharmapuri.blogspot.in சார்பாக வாழ்த்துக்கள்
email address: tnhspgtadpuri@gmail.com
தொகுப்பு  ஆரோக்கியம் தருமபுரி
-------------------------------------------------------

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைப்பை மீண்டும்  மீட்டெடுத்த மாநிலத்தலைவர் அவர்களுக்கும் பிரச்சார செயலாளர்  ரா.செல்வம் 
மாநில செய்தி தொடர்பாளர்

மாநிலத் தலைவர் அவர்களுக்கும்  வாழ்த்துக்களும் நன்றிகளும் பல.

சீனிவாசன்
மாநில சட்ட செயலாளர்
கிருஷ்ணகிரி

மாநிலத்தலைவா் அவா்களுக்கும,வாழ்த்துக்கள்
ச.சேகா், 
மாநில துனணத்தலைவா் தருமபுாி.

நம் மாநிலத் தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! வளர்க தஞ்சை மாவட்டத்திலும் நம் தலைவர் புகழ் ,,,,  
க.காவேரி                         
மாவட்டச் செயலாளர் ,    TNHSPGTA , தருமபுரி,

தரணிபோற்றும் தஞ்சையில் இயக்கத்தின் வளர்ச்சியை மீட்க கிரியா ஊக்கியாக செயல்பட்ட போர்ப்படை தளபதி மாநில தலைவர் வே.மணிவாசகன் அவர்களுக்கும் TNHSPGTA ன் தர்மபுரி மாவட்ட அமைப்பு தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறொம்.

25 November 2016

அறிவோம் அரசாணைகள்


-------------------------------------------                  அறிவோம் அரசாணைகள்
--------------------------------------------
தருமபுரி TNHSPGTA.                 www.tnhspgtadharmapuri.blogspot.in
*1. அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?*
அரசாணை நிலை  எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை   நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.

TNHSPGTA Pudugai: இன்று(24-11-2016)புதுகை அருள்மிகு பிரகதாம்பாள் அரசு மே.நி.பள்ளியில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசாணை கையேடு இலவசமாக வழங்கப்பட்டது.

கூட்ட. நிகழ்வின் சில பதிவுகள்.....

பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை: மண்டல அலுவலர்!!

''மூன்றாண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்த நாட்களை வைத்து இமிக்ரேஷன் சோதனை தேவையில்லாத (நான் இ.சி.ஆர்.,) பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

19 November 2016

Tamilnadu state and subordinate Service rules 27b ன் படி தகுதி காண் பருவம் முடித்து 6 மாதத்திறகுள் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால் தகுதிகாண் பருவம் முடித்ததாக கருதலாம்.தகுதிகான் பருவம் முடித்து அதற்கான ஆணைக்கு காத்திருப்பவர்கள் மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளை பெற தடையில்லை.

Tamilnadu state and subordinate Service rules 27b ன் படி தகுதி காண் பருவம் முடித்து 6 மாதத்திறகுள் ஆணை பிறப்பிக்கப்படவில்லை என்றால் தகுதிகாண் பருவம் முடித்ததாக கருதலாம்.தகுதிகான் பருவம் முடித்து அதற்கான ஆணைக்கு காத்திருப்பவர்கள் மருத்துவ விடுப்பு போன்ற சலுகைகளை பெற தடையில்லை.

12 November 2016

வேலூர் மாவட்டத்தில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் TNHSPGTA சார்பில் இன்று(12.11.16) முப்பெறும்விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டத்தில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில்  TNHSPGTA சார்பில்  இன்று(12.11.16)  முப்பெறும்விழா நடைபெற்றது. 

கிருஷ்ணகிரியில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில் TNHSPGTA சார்பில் இன்று(12.11.16) ஐம்பெறும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் மாநிலத்தலைவர் திரு.வே.மணிவாசகன் தலைமையில்  TNHSPGTA சார்பில்  இன்று(12.11.16) ஐம்பெறும் விழா நடைபெற்றது.  இன்று காலை  கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது... நான் மார்ச் 2006-ல் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றேன்.
பொறுப்பேற்றதிலிருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று வருகிறேன்... ஆனால், இன்று நடந்த ஐம்பெரும் விழா மிக மிக பாராட்டுக்குரியது....
இதனை செவ்வனே நடத்தி முடித்த மாநில சட்டத்துறைச் செயலர் சீனுவாசன், மாவட்டத் தலைவர் அலக்ஸாண்டர், மாவட்டச் செயலர் கோபி, பொருளர் சத்தியமூர்த்தி , அமைப்புச் செயலர் குபேந்திரன், மகளிரணிச் செயலர் திருமதி ரம்யா, தலைமையிடச் செயலர் வடிவேல், செய்தித் தொடர்பாளர் பச்சைமுத்து மற்றும் அனைத்து மாவட்ட, கல்வி மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்....
160-க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியத் தோழர்கள் மற்றும் தோழிகள் கலந்து கொண்டார்கள்... கலந்து கொண்டவர்களில் 75% 2009-க்குப் பிறகு பணியேற்றவர்கள்.... இதனைப் போல் மற்ற மாவட்டங்களும் செயலாற்ற கேட்டுக் கொள்கிறேன். மணிவாசகன்.

3 November 2016

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகள்

தமிழ்நாடு மேல்நிலைப்பபள்ளி   முதுநிலைப்பட்டதாரி  ஆசிரியர் கழகம்  (TNHSPGTA) தொடுத்துள்ள வழக்குகளும், அவைகளின் தற்போதைய நிலையும்

25 October 2016

தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்கள் முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுடன் சந்திப்பு

TNHSPGTA DHARMAPURI

முதன்மைக்கல்வி அலுவலர்
அவர்களுடன் சந்திப்பு
  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில்,
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில்
தருமபுரி  மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை (17.10.2016)  திங்கட்கிழமை மாலை  சந்தித்தனர்.

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட செயலாளர் திரு.கா.காவேரி,
மாவட்ட பொருளாளர் திரு.சுப்பிரமணியன்,
மாவட்ட துணைத் தலைவர் திரு.நாகேந்திரன்
ஆகியோர்  முதன்மைக்கல்வி அலுவலர்  திருமதி.மகேஸ்வரி அவர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

மாநில செய்தி தொடர்பாளர் திரு. ரா.செல்வம், மாநில துணைத்தலைவர் திரு.சேகர், மாவட்ட அமைப்பு செயலாளர் அருண்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜி.ஆரோக்கியம் உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
✅தற்போது முதுகலை ஆசிரியர்களில் பலர்,  பகுதி நேரத்தில்  எம்ஃபில் (M.Phil) உயர்க்கல்வி  படிக்க விரும்புகின்றனர். 
உயர்க்கல்வி  பயில  அனுமதி, 
பணிவரன்முறை, தகுதிகாண் பருவம் மற்றும் தேர்வுநிலை உள்ளிட்ட ஆணைகளை சிறப்பு முகாம்  நடத்தி வழங்க முதன்மைக்கல்வி அலுவலரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஜி.ஆரோக்கியம்,
மாவட்டசெய்தி தொடர்பாளர்,
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA),
தருமபுரி மாவட்டம்

11 October 2016

06.10.2016.தருமபுரி மாவட்ட (TNHSPGTA) செயற்க்குழுக்கூட்டம். மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

06.10.2016.
--------------------------------------------
தருமபுரி மாவட்ட (TNHSPGTA)
---------------------------------------------- செயற்க்குழுக்கூட்டம்.
--------------------------------------
     TNHSPGTA ன்  மாவட்ட செயற்க்குழுக்கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாலை ( 06.10.2016)   7.00 மணி அளவில் சிறப்பாக  நடைபெற்றது.
மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
புதிய மாவட்ட பொறுப்பாளர்
-------------------------------------------------
  தேர்வு
--------------
1. அதிமான்கோட்டை (ஆ) பள்ளி தமிழ் முதுகலை ஆசிரியரும், மாவட்ட துணைத்தலைவருமான திரு.காவேரி அவர்கள் புதிய மாவட்ட செயலாளராகவும்,
2. பி.அக்ரஹாரம், வணிகவியல் முதுகலை ஆசிரியர்,  திரு.சுப்பிரமணியன்  அவர்கள்  மாவட்ட பொருளாளராகவும்,
3. நத்தமேடு, விலங்கியல்  முதுகலை ஆசிரியரும்,  பாப்பிரெட்டிபட்டி வட்டார இணைச்செயலாளருமான திரு.நாகேந்திரன் அவர்கள் மாவட்ட துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அவர்களின் பணி சிறக்க கூட்டத்தில் வாழ்த்து  தெரிவிக்கப்பட்டது.
சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து 
பதவி உயர்வில் தலைமையாசிரியராக சென்றுள்ள திரு.அப்துல் அஜீஸ் அவர்களுக்கும்,
மாவட்ட பொருளாளராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.வையாபுரி அவர்களுக்கும்,
மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.சம்பத்குமார் அவர்களுக்கும்,  அவர்களின் சங்க பணிக்காக பாராட்டப்பட்டார்கள்.
அதுசமயம் மேலும்    மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றி!   நன்றி!!  நன்றி!!
ஜி.ஆரோக்கியம்
மாவட்ட. செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
தருமபுரி மாவட்டம்.

19 July 2016

| 19.7.2016 >> PGT POST 1600 | மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்(TNHSPGTA)  வழக்கின் காராணமாக, மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக  பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்

18 July 2016

Transfer Counselling Govt Order 2016

Transfer Counselling Govt Order

https://www.dropbox.com/s/i7tjxnhiwl3wubf/Transfer%20GO%2C%20Director%20Proceedings%20%2C%20Transfer%20Appilcation.pdf?dl=0

11 July 2016

09.07.2016 ( சனிக்கிழமை) அன்று , புதுக்கோட்டை அருள்மிகு.பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

🌺🌺🌺🌺🌺🌺🌺
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.
TNHSPGTA.
மாநிலப் பொதுக்கூட்டம்.
புதுக்கோட்டை. 09:07:16 சனிக்கிழமை.

09.07.2016 ( சனிக்கிழமை) அன்று , புதுக்கோட்டை அருள்மிகு.பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
(TNHSPGTA) மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்
--------------------------------
----------------------------
👉🏾தீர்மானம்: 1. தமிழக முதல்வருக்கு வாழ்த்து. . .

தமிழகத்தின் முதல்வராக 6-வது முறை பதவியேற்றிருக்கும்,மாண்புமிகு. முதல்வர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தின் புதிய அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு.பா.பெஞ்சமின் அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 2. பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்தல். .

2-(1). கடந்த 2015-2016 ஆம் கல்வியாண்டில், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவில்லை. 2016-2017ஆம் கல்வியாண்டில் (நடப்புக் கல்வியாண்டில்)     கடந்த ஆண்டுக்கும் சேர்த்து சுமார் 200உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

2-(2). கல்வி உரிமையியல் சட்டப்படி(RTE Act) ஆசிரியர் மாணவர்கள் விகிதம் 1 : 40 என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முதுகலை ஆசிரியர் பணியிட எண்ணிக்கையினை அதிகரித்திட வேண்டும் எனவும்

2-(3). 1989 முதல் 2011 வரை தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக இருந்து மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம்  உயர்த்தப்பட்ட அனைத்து  மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  தமிழ்  உட்பட அனைத்து  கலைப் பாடங்களுக்கும் புதிய பணியிடங்கள் வழங்கிட வேண்டும் எனவும்

2-(4). மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் இதுநாள் வரை 3181முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கியமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்கின்ற அடிப்படையில் மேலும் 5000முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி, நியமித்திட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2-(5). அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தமிழ்,ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்கள் சுமார் 500-700 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் மிகுந்த சிரமமான சூழலில் பாடம் போதிக்கின்றனர்.  அனைத்து மாணவர்களுக்கும்  பருவத்  தேர்வு கூட  நடத்திட  சாத்தியமில்லாத சூழ்நிலையே நிலவுகிறது. எனவே சுகூநு ஹஉவ-ன்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக மொழி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் இம் மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 3.    பணிமாறுதல் கலந்தாய்வு சார்ந்தவை. . .

3-(1) பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டபின்,மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்குப்  பின்பு, மேல்நிலைப்  பள்ளித் தலைமையாசிரியர்  பதவி  உயர்வு கலந்தாய்வு  நடத்திடவும், பின்பு முதுகலை  ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல்  கலந்தாய்வு, ஒளிவு  மறைவற்ற  முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்திட வேண்டும் எனவும்,

3-(2) தற்போதுள்ள ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வு முறையில் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக முன்னுரிமை எண்.10 உள்ளவரின் இடம் காலி ஏற்படும் போது,தற்போது உள்ள முறைப்படி 11ஆம் நபருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, ஆனால் உண்மையான முன்னுரிமை முதல் நபருக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும். இம்மாதிரியான குறைபாடுகள் களையப்பட்டு முறையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனவும்

3-(3). பொது மாறுதல் கலந்தாய்வில் உயிரியல் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்படும் போது, அந்த இடத்திற்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்கள் யார் விரும்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநில பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 4.    IIT, IIS, . மற்றும்NEET – போன்ற போட்டித் தேர்வுகளை ஒட்டிய புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு   கொண்டு வர வேண்டுதல். . .
👉
4-(1).     IIT, IIS, . மற்றும் NEET – போன்ற  போட்டித் தேர்வுகள் கட்டாயம் என்ற நிலையில், தமிழக மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் எவ்வித மாற்றமுமின்றி மாற்றியமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.     தேசியக் கல்வி ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சி நிறுவனத்தின் (NCERT)    பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் தமது பாடத்திட்டத்தினை முறைப்படுத்திக் கொள்கின்றன. மற்ற மாநிலங்களில் இப்பாடத்திட்டம் அப்படியே அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ், சமூக அறிவியல் பாடங்கள் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் NCERT-ல் உள்ள படி ஆங்கில வழியில் உள்ள பாடத்திட்டத்தினை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தமிழக மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
4-(2). அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறவும்,கல்வித் திறனை மேம்படுத்திடவும், 80ரூ க்கு மேல்    அறிதல், புரிந்து கொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல்,நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாட்கள் அமைய வேண்டும் எனவும், மதிப்பீட்டு முறையும் மாற்றப்பட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
4-(3). மேல்நிலைக் கல்வியில் உள்ள +1, +2 வகுப்பிற்கு பருவமுறைத் தேர்வுகள் (SemesterSystem) கொண்டு வரவும், அதாவது இரண்டு வருடத்திற்கும் சேர்த்து 4பருவங்களாகப் பிரித்து Semesterமுறையில் தேர்வுகள் அமைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 5.      7-வது   ஊதியக்குழு   சார்ந்தவை. . .

நடுவண் அரசின், 7-வது ஊதியக் குழுவில், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18,150/-என்பதை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்துள்ளனர். இதனையே அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழகத்தில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தினை அளித்திட வேண்டும்

தமிழகத்தில் 01.06.2009 முதல் முதுகலை ஆசிரியர்கள் ரூ.14,100/-என்ற குறைவான ஊதிய விகிதத்தினையே  இன்று  வரை பெற்று  வருகின்றனர்.  இதனை மாற்றி  அமைத்து,  எதிர்வரும் ஊதியக்குழுவின் பரிந்துரையில் ரூ.18,150/- என்பதை அடிப்படையாக வைத்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டுமாய் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 6 .    மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம் வேண்டுதல். . .

மேல்நிலைக் கல்வியில் உள்ள சுமார் 3400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள நிலையில் தனி இயக்குநரகம் அமைத்திட வேண்டும் அல்லது மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநர் பணியிடமாவது ஏற்படுத்தி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பணி சார்பான தேவைகளை உடனடியாக தீர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலையினை ஏற்படுத்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 7.   மேல்நிலைக் கல்விக்கான ஒரு நபர் குழு அறிக்கை வெளியிட வேண்டுதல். .

மேல்நிலைக் கல்வியில் உள்ள இடர்பாடுகளை களையும் விதமாக அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவான திரு. ஜெகந்நாதன் குழு,திரு.கருணாகரன் குழு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட்டு முதுகலை ஆசிரியர்களின் துயர் துடைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 8.    தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் நீக்கிட வேண்டுதல். . .

மாண்புமிகு.தமிழக  முதல்வர் அவர்கள்  2011-ஆம்  ஆண்டு ஆட்சியில்  அமரும்  போதே ஊஞளு திட்டம் முற்றிலும் அகற்றப்பட்டு, பழைய ஓய்வூதியத்திட்டமே பின்பற்றப்படும் என கூறினார்கள். ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.  6-வது  முறையாக பதவியேற்றிருக்கும்  தமிழக முதல்வர்  அவர்கள் தன்பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டத்தினை நீக்குவது  பற்றி  ஆராய  ஒரு குழுவினை  அமைத்துள்ளார்கள். காலம் தாழ்த்தாமல் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே நடைமுறைப்படுத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 9. 2004-2006 -தொகுப்பூதியக் காலத்தை முறையான பணிக்காலமாக்கிட வேண்டுதல். . .

2004 முதல் 2006 முடிய உள்ள காலங்களில் தொகுப்பூதியத்தில்,பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து அக்காலங்களுக்குரிய நிலுவை ஊதியத்தினை வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 10. உதவித் தலைமையாசிரியர் படி வழங்கிட வேண்டுதல். ..

மேல்நிலைப்  பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்களுக்கு படியாக ரூ.1000/- ஒவ்வெரரு மாதமும் வழங்கிட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 11.    இடஒதுக்கீடு முறையில் மாணவர்களை சேர்த்தலைக் கண்டித்தல். .

அரசுப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என எவ்விதமான அரசாணையும் இல்லை. ஆனால் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் நிலை உள்ளது. யாருக்கும் பள்ளியில் சேர்க்கை இல்லை எனக் கூறும் நிலையே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் இச்செயல்முறையினைக் காரணம் காட்டி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதை இம்மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

👉
தீர்மானம்: 12. அனைத்து துறைப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்திட வேண்டுதல். . .

ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள்,அறநிலையத்துறைப்  பள்ளிகள், மாநகராட்சிப்  பள்ளிகள்,  இது போன்ற  அனைத்துப்  பள்ளிகளும் அரசின் நேரடி நிதியிலிருந்தே நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மேற்கண்ட பள்ளிகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகளுடன் இணைத்து   பள்ளிக் கல்வித்துறை என்ற ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 13.   ஒரே நிலையில் 30ஆண்டுகள் பணிக்காலம் - 6ரூ ஊதிய உயர்வு வேண்டுதல். .

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில்    30 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில்     பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கு6ரூ, சிறப்பு நிலைக்கு 6ரூ ஊதிய உயர்வு வழங்குவது போல் 30ஆண்டுகள் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணி முடித்தவருக்கு6ரூ ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

  👉 தீர்மானம்: 14. தேர்வுத் துறை சார்ந்த கோரிக்கைகள். . .

14-(1). மேல்நிலைக் கல்வியில்,ஒருங்கிணைந்த விடைத்தாள் திருத்தும் மையங்கள் கல்வி மாவட்டம் தோறும் அமைத்திட வேண்டும் எனவும்

👉
14-(2).  மேல்நிலைத்  தேர்வு விடைத்தாள்  ஒன்றுக்கு உழைப்பூதியமாக  ரூ.20/- வழங்கிட  வேண்டும் எனவும்

👉14-(3). மாணவர்கள் எதிர்கால நலத்தினைக் கருத்தில் கொண்டு,முதுகலை ஆசிரியர்களுக்கு நாள்

ஒன்றுக்கு மொழிப்பாடத்திற்கு (காலை 10, மாலை 10) 20தாள்களும், மற்ற பாடங்களுக்கு (காலை 8, மாலை 8) 16 தாள்களும் விடைத்தாள் திருத்த வழங்கிட வேண்டும் எனவும்

👉 14- (4).  தேர்வுக்  கால  பணியான, துறை  அலுவலர்,  கூடுதல்  துறை அலுவலர்,  வழித்தட  அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர்,பறக்கும் படை உறுப்பினர்,வினாத்தாள் கட்டுக் காப்பாளர் போன்ற அனைத்து பணிகளுக்குமான உழைப்பூதியத்தினை  தற்போது இருப்பதை விட    3 மடங்கு உயர்த்தி  வழங்கிட வேண்டும்

7 July 2016

கரூர் மாவட்ட TNHSPGTA வின் பொதுக்குழு கூட்டம் 7.7.16 ல் MHSS பள்ளியில் மாவட்ட தலைவர் திரு.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.


மாநில து.தலைவர் திரு.சக்திவேல் மாவட்ட செயலர் திரு.பழனிசாமி மாவட்ட து.தலைவர் திரு.ஜான் ஆகியோர் முனனிலை வகித்தனர்.

 இனறைய கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்ட்டது. 

1

நமது அமைப்பை பற்றியும் மாநில தலைவர் பற்றியும் அவதூறு பரப்பி வரும் விசமிகளை இப்பொதுக்குழூ வன்மையாக கண்டிக்கிறது.இத்தகைய செயல் தொடருமாயின் தகுந்த நடவடிக்கை எடுப்பது என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.


2.

தேர்வு நிலைக்கு சிறப்பு அமர்வு ஏற்படுத்தி ஆணை வழங்கிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு பாராட்டுதலையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது..

அதே வேளையில் உண்மைத் தன்மை பெறப்படாத ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை ஆணைர வழங்க இப்பொதுக்குழு கேட்டு கொள்கிறது.

3.

மேலும் மாநில பொதுக்குழுவில் மாவட்டத்தின் சார்பில் சமர்பிக்க வேன்டிய கருத்துருக்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மாவட்ட பொருளர் திரு.சக்திவேல் நன்றி  கூறினார்